News March 29, 2025
மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி செய்த பெண் கைது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அரவிந்த்சாமியிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த வித்யா ராஜ் என்ற இளம்பெண், பண மோசடி செய்துள்ளார். மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 25, 2026
1300 படிக்கட்டுகளில் ஆசனம் செய்து அசத்திய மாணவி

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஜிஹானா இன்று காலை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையிலுள்ள 1300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம் செய்தபடி மலையேறினார். மாணவியின் இந்த முயற்சியைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
News January 24, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்
News January 24, 2026
சேலம் – திருத்தணி இடையே ரயில்: ஜனவரி 27 முதல் இயக்கம்

சேலம் வழியாக சார்லபள்ளி – திருவனந்தபுரம் இடையே புதிய அம்ரித் பாரத் வாராந்திர ரயில் ஜனவரி 27 முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்து திருத்தணி வழியாகச் செல்லும். மறுமார்க்கத்தில் புதன் மாலை கிளம்பி வியாழன் காலை சேலம் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


