News March 29, 2025
விரைவில் ஆலய நுழைவு போராட்டம்: சீமான் ஆவேசம்

விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால் விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாதக முன்னெடுக்கும் என சீமான் தெரிவித்துள்ளார். மூடப்பட்ட கோவிலை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அனுமதி கொடுக்காதது கண்டனத்திற்குரியது எனவும் விமர்சித்துள்ளார். இருதரப்பு மக்களிடமும் இணக்கத்தை ஏற்படுத்தாமல் கோயிலை மூடிவைப்பது நியாயமா? எனவும் கேட்டுள்ளார்.
Similar News
News January 27, 2026
CM ஸ்டாலின் வீட்டில் நிகழ்ந்த பரபரப்பு.. சற்றுமுன் கைது

CM ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்திய EX ராணுவ வீரரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான பாலமுருகன், மதுபோதையில் இந்த செயலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடித்துவிட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் 6 ஆண்டுகளுக்கு முன்பே அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
News January 27, 2026
ஆதார் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

உங்கள் செல்போனில் இருந்தே தனிப்பட்ட ஆதார் விவரங்களை (முகவரி, பெயர், மொபைல் எண்) புதுப்பிக்கும் வசதி கொண்ட புதிய ஆதார் செயலியை UIDAI நாளை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இனிமேல் அச்சிடப்பட்ட அசல் அட்டையை எடுத்துச் செல்ல தேவையில்லை. டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்தி, அடையாளச் சரிபார்ப்புகளை விரைவாக முடிக்க இந்த செயலி பெரும் உதவியாக இருக்கும். SHARE IT.
News January 27, 2026
கன்னட நடிகைக்கு பலாத்கார மிரட்டல்

பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த குடும்பத் தகராறில் கன்னட டிவி நடிகை காவ்யா கௌடாவும் அவரது கணவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்பதியினரை ஆபாசமாக திட்டி தாக்கியதுடன், காவ்யா பலாத்காரம் & கொலை மிரட்டலுக்கு ஆளானதாகவும், அவரது கணவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் தெரிகிறது. தம்பதியினர் இருவரும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


