News March 29, 2025
முனைவர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்புக்கான தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று (மார்ச்.29) பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 1ம் தேதி விண்ணப்பம் திறக்கப்படும்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 18, 2025
ரூ.50,000 சம்பளத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <
News April 18, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.