News March 29, 2025
விழுப்புரத்தில் சனி தோஷம் நீக்கும் தலம்

விழுப்புரம், மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் கையில் வில், அம்பும் மற்ற இரு கைகளில் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள் பாலிக்கிறார் . சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளை தன்னுடலில் நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்கிரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளதால் இவரை வழிபட்டால் சனி தோஷம் அகலும், சனிப் பார்வை நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 2, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, ரவி, வெங்கடசுப்ரமணியன், ராஜவேல், சிவநேசன், சையது முகம்மது, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட 18 பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.
News April 2, 2025
விழுப்புரம்: தொழிற்கூடங்களை வாடகைக்கு பெறலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விருப்பமுள்ளவர்கள் வரும் 4ம் தேதி ஈங்கூர் தொழிற்பேட்டையை பார்வையிட்டு விண்ணப்பிலாம் என்று கூறப்பட்டுள்ளது.
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. ஷேர் பண்ணுங்க