News March 29, 2025
தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி?

கரூரில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தர்பூசணியில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக பரிசோதனை செய்தனர். எனவே பொதுமக்கள் தர்பூசணியை பார்த்து வாங்குவது நல்லது.
Similar News
News February 9, 2026
கரூர்: ரயில்வேயில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195
2) வயது வரம்பு: 18 – 33
3) கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
4) எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை.
5) விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026
மேலும், விவரங்களுக்கு<
News February 9, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை பயிற்சியில் சேர விருப்பமுள்ள தகுதியுள்ள இளைஞர்கள் www.tahdco.com என்ற முகவரியின் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். (ஷேர் பண்ணுங்க)
News February 9, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


