News March 29, 2025
குமரி வழக்கறிஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

தக்கலை அருகே 13.3.2025 அன்று 2 பள்ளி மாணவிகள் மாயமாகினர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் குமார் மாணவிகளை பைக்கில் ஏற்றி சென்று, ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, போக்சோவில் கைது செய்யப்பட்ட அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க குமரி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்று அவர் சிறையிலடைக்கப்பட்டார். *வக்கீலின் இச்செயல் குறித்த உங்கள் கருத்து?
Similar News
News February 18, 2026
குமரி: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், முப்பந்தல் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.18) புதன்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காவல்கிணறு தெற்கில் உள்ள மங்கம்மாள் சாலை, கண்ணுப்பொத்தை, குமாரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், காற்றாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 18, 2026
குமரி: உடல் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் படுக்கையில் உடல் கருகிய நிலையில் சடலமாக நேற்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருமனை போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் எப்படி இறந்தார்? தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டாரா? என்ன காரணம்? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 18, 2026
குமரி: உடல் கருகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் படுக்கையில் உடல் கருகிய நிலையில் சடலமாக நேற்று கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருமனை போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் எப்படி இறந்தார்? தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டாரா? என்ன காரணம்? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.


