News March 29, 2025

நெல்லையில் 2 யானைகளுக்கு சண்டை; ஒரு யானை பலி

image

திருநெல்வேலி மாவட்டம் அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தில் காரையாறு வனப்பகுதியில் இரண்டு யானைகள் சண்டையிட்டுக் கொண்டதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த யானையை பரிசோதனைக்கு உட்படுத்தி இறப்பை உறுதி செய்தனர். சண்டையிட்டுக் கொண்டதில் ஒரு யானையின் கொம்பால் குத்தப்பட்டதில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Similar News

News April 18, 2025

ரூ.50,000 சம்பளத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

image

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 18, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

image

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.

error: Content is protected !!