News March 29, 2025
கஞ்சா வியாபாரி என்கவுண்ட்டரில் கொலை

உசிலம்பட்டி போலீஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வாரம் காவலர் முத்துக்குமரன் கஞ்சா வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியபோது, பொன்வண்ணன் அவரை கல்லால் அடித்துக் கொன்றார். இதனையடுத்து, கம்பம் அருகே காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Similar News
News April 2, 2025
ஒரு முத்தத்திற்கு ₹50 ஆயிரமா..? டீச்சரின் நூதன மோசடி!

பெங்களூருவில் kindergarden ஸ்கூல் நடத்தும் ஸ்ரீதேவி, ராகேஷ் என்பவருடன் நெருங்கி பழகி முதலில் ₹2 லட்சம் வாங்குகிறார். பிறகு, ₹50 ஆயிரம் வேண்டும் என டிமாண்ட் செய்ய, அதற்கு ஒரு முத்தத்தை கொடுத்து மயக்கி இருக்கிறார். நிலைமையை உணர்ந்த ராகேஷ் விலகி செல்ல, நண்பர்களுடன் சேர்ந்து, ₹20 லட்சம் வேண்டும் என ஸ்ரீதேவி மிரட்டுகிறார். விஷயம் போலீசுக்கு வர, ஸ்ரீதேவியும் அவரது 2 நண்பர்களும் கைதாகி இருக்கின்றனர்.
News April 2, 2025
தேர்தல் நேரத்தில் திமுக கபட நாடகம்: அண்ணாமலை

சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ள நிலையில் இன்று கச்சத்தீவை வைத்து முதலமைச்சர் நாடகமாடி வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவரின் x பதிவில் இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் துன்புறக் காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் CM கபட நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.
News April 2, 2025
சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs இபிஎஸ்.. வார்த்தை போர்

கச்சத்தீவு குறித்து முதல்வர் மற்றும் இபிஎஸ் இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் நீங்கள் 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இப்போது கூட டெல்லி சென்றீர்களே, கச்சத்தீவு குறித்து வலியுறுத்தினீர்களா? எனவும் வினவினார்.