News March 29, 2025

பவானி ஆற்று நீர் மஞ்சள் நிறத்தில் தோற்றம்

image

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்று நீர் இன்று (29-03-2025) மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி மக்களுக்கு இந்த தண்ணீரே குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்று ஆய்வு நடத்தினர்.

Similar News

News February 1, 2026

கோவையில் கொத்தாக தூக்கிய செந்தில்பாலாஜி

image

கோவை மாநகரில் விளாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, பல்வேறு கட்சிகளில் இருந்து செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் பலர் தங்களை இணைத்து கொண்டனர். அப்போது, மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, துணை செயலாளர் அசோக் பாபு ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News February 1, 2026

கோவை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

கோவை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

News February 1, 2026

மருதமலை முருகன் பற்றி தெரியுமா?

image

மருதமலை முருகன் கோயில் முதல் முதலில் கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது, விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தல் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதப்பன், மருதைய்யன் என்ற பெயர்களில், 9 ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இந்த கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்துள்ளார். தீமைகளை போக்கும் சர்வ வல்லமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.

error: Content is protected !!