News March 29, 2025
₹50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

கர்நாடகா மாநிலம் கானாபூரில் சைபர் மோசடியில் ₹50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி செய்வதறியாது தற்கொலை செய்துகொண்டனர். முன்னாள் அரசு ஊழியரான நாசரேத்துக்கு, க்ரைம் பிரான்ச் காவல்துறை என கூறி தொலைபேசி மூலமாக இருவர் மிரட்டியுள்ளனர். தங்கள் சிம் கார்டை வைத்து மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி, ₹50 லட்சம் வரை பெற்றுள்ளனர். மேலும் பணம் கேட்க, வயதான தம்பதி விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
Similar News
News January 22, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் *இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் *அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது எளிய வழி என்றாலும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்து வைக்க வேண்டியது அவசியம். இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,250 ஆக உயர்வு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கருணை ஓய்வூதியம் ₹4,500-லிருந்து ₹5,000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,000-லிருந்து ₹2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
News January 22, 2026
TTV தேர்தலில் போட்டியிடவில்லையா?

EPS-க்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த TTV தினகரன், CM வேட்பாளராக EPS இருக்கும் NDA கூட்டணியில் நேற்று மீண்டும் இணைந்தார். இந்நிலையில் அமமுகவின் தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் 8+ 1 ராஜ்யசபா சீட்டை TTV கேட்டுள்ளார். மேலும் இந்த முறை தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், அந்த 1 ராஜ்யசபா சீட் மட்டும் கொடுத்துடுங்க என கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.


