News March 29, 2025

₹50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

image

கர்நாடகா மாநிலம் கானாபூரில் சைபர் மோசடியில் ₹50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி செய்வதறியாது தற்கொலை செய்துகொண்டனர். முன்னாள் அரசு ஊழியரான நாசரேத்துக்கு, க்ரைம் பிரான்ச் காவல்துறை என கூறி தொலைபேசி மூலமாக இருவர் மிரட்டியுள்ளனர். தங்கள் சிம் கார்டை வைத்து மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி, ₹50 லட்சம் வரை பெற்றுள்ளனர். மேலும் பணம் கேட்க, வயதான தம்பதி விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

Similar News

News April 2, 2025

நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா தாக்கல்: எதிர்ப்பு

image

நாடாளுமன்றத்தில் தாக்கலான வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவின் அம்சங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து நடமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

News April 2, 2025

ஊடுருவ முயன்ற பாக்., ராணுவம்.. இந்தியா பதிலடி..

image

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 -5 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர். பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 2, 2025

சம்மர் சீசனில் டெய்லி தலைக்கு குளிக்கலாமா..?

image

வாரத்தில் எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்பதை அறிவதற்கு முன், முடியின் தன்மையை அறிவது அவசியம். எண்ணெய் அதிகமாக சேர்ந்தால் என்றால், வாரத்தில் 3-4 வரை தலைக்கு குளிக்கலாம். ட்ரை ஹேர் என்றால், – வாரத்திற்கு 2 முறை போதும். என்ன இருந்தாலும், மாதத்தில் 4-5 முறை தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். மேலும், என்னவகை ஷாம்பூ யூஸ் செய்கிறோம் என்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.

error: Content is protected !!