News March 29, 2025
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.
Similar News
News December 6, 2025
ஒரே வாரத்தில் 100 டன் வெள்ளி விற்பனை!

வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீட்டில் இருக்கும் பழைய வெள்ளி பொருள்களை விற்று வருகின்றனர். IBJA தரவுகளின் படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 டன் வெள்ளி விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக, ஒரு மாதத்திற்கு 10-15 டன் தான் விற்பனைக்கு வரும். தற்போது ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹1.90 லட்சத்தை தொட்டதால், இந்த சூழலை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
News December 6, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்.. பவன் கல்யாண் காட்டம்

ஹிந்துக்கள் தங்கள் நம்பிக்கையை பின்பற்றக் கூட, நீதிமன்றத்தை நாட வேண்டி இருப்பதாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பவன் கல்யாண் வேதனை தெரிவித்துள்ளார். ஹிந்து மரபுகளை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. பிற மத நிகழ்வுகளை அவர்களால் கேலி செய்ய முடியுமா? சாதி, மொழி பிரிவினைகளை கடந்து ஹிந்துக்கள் ஒன்றிணையும் வரையில், இந்த அவலம் தொடரும் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
ராசி பலன்கள் (06.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


