News March 29, 2025

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

image

நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.

Similar News

News April 2, 2025

நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா தாக்கல்: எதிர்ப்பு

image

நாடாளுமன்றத்தில் தாக்கலான வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவின் அம்சங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து நடமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

News April 2, 2025

ஊடுருவ முயன்ற பாக்., ராணுவம்.. இந்தியா பதிலடி..

image

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 -5 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர். பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 2, 2025

சம்மர் சீசனில் டெய்லி தலைக்கு குளிக்கலாமா..?

image

வாரத்தில் எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்பதை அறிவதற்கு முன், முடியின் தன்மையை அறிவது அவசியம். எண்ணெய் அதிகமாக சேர்ந்தால் என்றால், வாரத்தில் 3-4 வரை தலைக்கு குளிக்கலாம். ட்ரை ஹேர் என்றால், – வாரத்திற்கு 2 முறை போதும். என்ன இருந்தாலும், மாதத்தில் 4-5 முறை தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். மேலும், என்னவகை ஷாம்பூ யூஸ் செய்கிறோம் என்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.

error: Content is protected !!