News March 29, 2025
போதைக்கு அடிமையாகி Suicide செய்யும் இளைஞர்கள்

மாநிலத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பல ஆண்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். குறிப்பாக, வயது வித்தியாசம் இல்லாமல் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக மன நல மருத்துவ சங்கத்தின் EX தலைவர் பன்னீர் செல்வம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
நேற்று முளைத்த காளான்… விஜய்யை சீண்டிய R.S. பாரதி!

அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக எதிர்த்து களமாடி வருகிறார். இந்நிலையில், ‘நேற்று முளைத்த ஒரு காளான், கட்சித் தொடங்கி 17 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், திமுகவை சீண்டிப் பார்க்கிறார்கள்’ என திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி விமர்சித்துள்ளார். திமுக தொண்டன் தூங்கினால் கும்ப கர்ணன், எழுந்தால் இந்திரஜித் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
News April 2, 2025
கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்: செல்வப் பெருந்தகை

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என ஒருபோதும் காங். சொல்லாது என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 272 ஏக்கர் வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர் இந்திரா காந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது, மீனவர்கள் தங்களுக்கு உரிமை வேண்டும் என சொல்வதால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதை ஆதரிக்கிறோம் என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.