News March 29, 2025

ஏன் தோனி முன்னரே களமிறங்கவில்லை?

image

சோஷியல் மீடியாவில் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னை அணியின் கையில் இருந்து நழுவிய போது, அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினார். ஷிவம் துபே அவுட்டானதுமே அவர் ஏன் வரவில்லை என பலர் வினவுகின்றனர். அதே நேரத்தில் சிலர், அவர் எப்படியோ 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடிச்சாரே அதுவே போதும் என்றும் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News April 2, 2025

விண்வெளியில் ஆல்கஹால் மேகம்: சரக்குமழை பொழியுமா?

image

விண்வெளியில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அக்விலா விண்மீன் தொகுப்பில் 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆல்கஹால் மேகம் இருக்கிறதாம். 400 குவிண்டிலியன் லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை கொண்டுள்ள இது, சூரிய மண்டலத்தை விட 1,000 மடங்கு பெரியது. பூமியில் உள்ள ஒவ்வொருவரும் தினமும் 3 லட்சம் லிட்டர் குடித்தாலும் அதனை காலி செய்ய 1 பில்லியன் ஆண்டுகளாகும். பூமியில் இருந்து தொலைவில் இருப்பதால் சரக்கு மழை பொழிய வாய்ப்பில்லை.

News April 2, 2025

உல்லாச வாழ்க்கை.. தலையில் கல்லை போட்டு கொலை

image

சென்னை அனகாபுத்தூரில் பாக்யலட்சுமி (33) என்பவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான பாக்யலட்சுமிக்கு முதல் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளன. கணவரைப் பிரிந்து தற்போது ஞான சித்தன் என்பவருடன் வசித்து வந்த நிலையில், அவர் வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஞான சித்தன், பாக்யலட்சுமியை கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்துள்ளார்.

News April 2, 2025

‘அர்ஜுன் ரெட்டி’ நடிகையிடம் அத்துமீறிய இயக்குநர்

image

அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டே, 22 வயதில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தெலுங்கு பட ஷூட்டிங்கின்போது கேரவனில் உடை மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், கதவை தட்டாமல் இயக்குநர் உள்ளே நுழைந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கோபத்தில் அந்த இயக்குநரை வெளியே போகச் சொல்லி, தான் கத்தியதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். எந்த இயக்குநராக இருக்கும்?

error: Content is protected !!