News March 29, 2025
மகாத்மா ரயிலை நிறுத்திய சின்னாளப்பட்டி மக்கள்!

திண்டுக்கல்: பிப்.2 1946ஆம் ஆண்டு. அப்போது மகாத்மா காந்தி தனது கடைசி தென் இந்திய பயணத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லா ஊர் ஸ்டேஷனிலும் காந்தியடிகளின் ரயில் நிற்காது. அதனால், மகாத்மாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்த சின்னாளப்பட்டி மக்கள் ரயில்வே சிக்னலை மாற்றி அமைத்து மகாத்மா ரயிலை தங்கள் ஊரில் நிறுத்தச் செய்தனர்.
Similar News
News December 24, 2025
திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News December 24, 2025
ஒட்டன்சத்திரத்தில் வசமாக சிக்கிய பெண்! அதிரடி கைது

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே நரிப்பட்டியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகேசன் என்பவரிடம், அரசு அதிகாரி என்று கூறி பல்லடத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் அறிமுகமானார். பின் அரசின் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, ஆதார் கார்டு எடுப்பது போல நடித்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடிச் சென்றார். புகாரின் பேரில் பிரியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 24, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


