News March 29, 2025
நடந்து சென்றவர் மீது கார் மோதி உயிரிழப்பு

வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (57). கொத்தனாராக வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் (மார்.27) புளியம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து மாலை 6:30 மணிக்கு புளியம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News October 13, 2025
காஞ்சிபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாளை (14.10.2025) காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, திருப்பெரும்புதூர், வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் நகரப் பஞ்சாயத்து பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆவணங்களுடன் மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
News October 13, 2025
காஞ்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

1)பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் உள்ள தனியார் மண்டபம், 2)வைத்தியலிங்கம் பேலஸ், 3)முருகன் கோயில் மெயின் ரோடு குன்றத்தூர், 4)திருப்புட்குழி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காஞ்சிபுரம், 5)ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வல்லம் ஸ்ரீபெரும்புதூர், 6)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 7)களியனூர் ஆகிய இடங்களில் நாளை (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. SHARE பண்ணுங்க.
News October 13, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.