News March 29, 2025
CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.
Similar News
News November 5, 2025
மாமல்லபுரம்: ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர்’

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘த.வெ.க. முதல்வர் விஜய்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ADMK- TVK கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், த.வெ.க.-வின் இந்த முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது.
News November 5, 2025
வன்மத்தை கக்கிய முதல்வர் – விஜய்

முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டி உள்ளார். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற த.வெ.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘ எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு, வேதனையில் அமைதி காத்த போது எங்களுக்கு எதிராக அரசியல் செய்தார்கள்’ என விஜய் தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசி உள்ளார்.
News November 5, 2025
FLASH: மாமல்லபுரம்: ’முதல்வர் பேசியது வடிகட்டிய பொய்’

த.வெ.க பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இதில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், அவசர அவசரமாக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது வடிகட்டிய பொய் எனவும் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், ‘த.வெ.க-வுக்கு 100% வெற்றி கிடைக்கும்’ என தெரிவித்தார். ஷேர் பண்ணிட்டு உங்கள் கருத்தை பதிவு பண்ணுங்க?


