News March 29, 2025

மீளாத துயரில் ஆழ்ந்த மியான்மர்.. 1000 பேர் மாயம்

image

மியான்மரில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த பூகம்பம் அந்நாட்டு மக்களை உலுக்கியது. சீட்டு கட்டுகளைப் போல் சரிந்த கட்டடங்களில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் நய்பிடாவ், மாண்டலே, டாங்கூ நகரங்களில் எங்குப் பார்த்தாலும் கட்டடக் குவியலாகக் காட்சியளிக்கிறது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 2, 2025

கச்சத்தீவை மீட்க தனித் தீர்மானம் கொண்டுவந்தார் CM

image

கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய அவர், இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

News April 2, 2025

விண்வெளியில் ஆல்கஹால் மேகம்: சரக்குமழை பொழியுமா?

image

விண்வெளியில் பல ஆச்சரியங்கள் உள்ளன. அக்விலா விண்மீன் தொகுப்பில் 10,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆல்கஹால் மேகம் இருக்கிறதாம். 400 குவிண்டிலியன் லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை கொண்டுள்ள இது, சூரிய மண்டலத்தை விட 1,000 மடங்கு பெரியது. பூமியில் உள்ள ஒவ்வொருவரும் தினமும் 3 லட்சம் லிட்டர் குடித்தாலும் அதனை காலி செய்ய 1 பில்லியன் ஆண்டுகளாகும். பூமியில் இருந்து தொலைவில் இருப்பதால் சரக்கு மழை பொழிய வாய்ப்பில்லை.

News April 2, 2025

உல்லாச வாழ்க்கை.. தலையில் கல்லை போட்டு கொலை

image

சென்னை அனகாபுத்தூரில் பாக்யலட்சுமி (33) என்பவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான பாக்யலட்சுமிக்கு முதல் திருமணம் நடைபெற்று 2 குழந்தைகள் உள்ளன. கணவரைப் பிரிந்து தற்போது ஞான சித்தன் என்பவருடன் வசித்து வந்த நிலையில், அவர் வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஞான சித்தன், பாக்யலட்சுமியை கொன்றுவிட்டு போலீசில் சரண் அடைந்துள்ளார்.

error: Content is protected !!