News April 2, 2024
BIG BREAKING: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்.25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஆட்சியர்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.
Similar News
News December 29, 2025
சேலத்தில் நடைபெற்றது பொதுக்குழுவே அல்ல: பாலு

அரசியல் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு விதிமுறைகள், <<18701469>>சேலம் பொதுக்குழுவில்<<>> மீறப்பட்டுள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல எனவும் அவர் சாடியுள்ளார். அந்த பொதுக்குழு முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என்றும், மாமல்லபுரம் பொதுக்குழுவில் அன்புமணிக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு ECI அங்கீகாரம் தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News December 29, 2025
பாரதிராஜா கவலைக்கிடமா..? Clarity

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன் இயக்குநர் பாரதிராஜா <<18691522>>ஹாஸ்பிடலில் <<>>அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாரதிராஜா நலமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை குறித்து வெளிவரும் மற்ற தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
News December 29, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

2025-ம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை 80% வரை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஜன.1-ல் 22 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ₹57,200 மட்டுமே. ஆனால் இன்றைய நிலவரப்படி, 1 சவரன் ₹1,04,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டு தொடக்கத்தில் ₹79-க்கு விற்கப்பட்ட 1 கிராம் வெள்ளி, தற்போது ₹281-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026-ல் எப்படி இருக்குமோ?


