News March 29, 2025
வாடிப்பட்டி நீதிமன்றத்தில் கொலையை தடுத்த போலீஸ்

வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் அறிவால் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சமயநல்லூரைச் சேர்ந்த சூர்யா 23, கண்ணன் 23 என்பதும் ஜாமினில் வெளிவந்த சரண் என்பவரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்தது தெரயவந்தது.
Similar News
News April 3, 2025
மதுரை மாவட்ட புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 2, 2025
‘கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டம் தேவை’

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
News April 2, 2025
மதுரை: ஒரே மேடையில் சாலமன் பாப்பையா மற்றும் சசிகுமார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலை நிகழ்வில் ஆசிரியர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக காலையில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.