News March 29, 2025

இந்திய ராணுவத்தில் இணையும் ‘பறக்கும் எமன்’!

image

முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ‘ப்ரச்சந்த்’ எனும் அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள், விரைவில் இந்திய ராணுவத்தில் சேரவுள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது. ரூ.62,700 கோடி செலவில் மொத்தம் 156 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கவுள்ளது. 5.8 டன் எடையும், 16,400 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை அருகே நிலைநிறுத்தப்படவுள்ளன.

Similar News

News April 2, 2025

ஜிவி டைவர்ஸுக்கு நான் காரணமா? நடிகை விளக்கம்

image

ஜிவியின் டைவர்ஸுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திவ்ய பாரதி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நடிகருடன், குறிப்பாக திருமணமான ஆணுடன் நிச்சயமாக டேட்டிங் செய்ய மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார். ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்ததால் ஜிவிக்கு டைவர்ஸ் ஆனதாக பலரும் பேசிவருகின்றனர்.

News April 2, 2025

முன்னாள் எம்.பி. முருகேசன் உடல் தகனம்!

image

உடல்நலக்குறைவால் மறைந்த சிதம்பரம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் அ.முருகேசன் (87) உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக சிதம்பரம் மாரியப்பன் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முன்னாள் காங்., தலைவர் K.S.அழகிரி, திருமா, திமுக நிர்வாகிகள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

News April 2, 2025

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

image

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு பின்பு வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரியில் மக்களவைத் தலைவரிடம் அறிக்கையைக் கூட்டுக் குழு சமர்ப்பித்தது. அறிக்கை கடந்த பிப்., மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

error: Content is protected !!