News March 29, 2025
17 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
Similar News
News February 19, 2026
தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும்: SP வேலுமணி

உழைக்கும் கோவை மக்களை <<19172256>>தயாநிதி மாறன்<<>> இழிவுபடுத்திவிட்டதாக SP வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். கோவை மக்களை இழிவுபடுத்தி அவர் பேசும்போது, செந்தில்பாலாஜி சிரித்துக் கொண்டிருப்பதாகவும் வேலுமணி சாடியுள்ளார். மேலும் திமுகவுக்கு கோவை என்றாலே வெறுப்புதான் வருவதாகவும், சர்ச்சை பேச்சுக்கு தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News February 19, 2026
உணவுப்பொருள்கள் வாங்கும் போது… இதை கவனிங்க

உணவுப்பொருள்களை வாங்கும் போது expiry date முதல் தரச்சான்று வரை கவனிக்கவும். நிறமூட்டிகள், சர்க்கரை, புராசஸிங் பொருள்களின் பயன்பாடு ஆகியன குறித்தும் கவனிக்க வேண்டியது அவசியம். பொதுவான உணவுப் பொருள்களுக்கு FSSAI தரச்சான்றும், நெய் எனில் அக்மார்க் முத்திரையும், பால், குடிநீருக்கு ISI முத்திரையும் இருக்கிறதா எனப் பாருங்கள். பொருள்களை எந்த வெப்ப நிலையில் வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
News February 19, 2026
மாநில சுயாட்சி பற்றி ஸ்டாலின் பேசலாமா? தமிழிசை

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கும்<<19173736>> CM ஸ்டாலின்<<>> மாநில சுயாட்சியை பற்றி பேசுவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். உள்ளாட்சிகளுக்கு உரிமை கொடுக்க முடியாதவர், எல்லா மாநிலங்களையும் பாரபட்சமும் இல்லாமல் ஆட்சி நடத்தும் மத்திய அரசை குறை கூறுவதாகவும் சாடியுள்ளார். தோல்வி பயத்தால் இதுபோன்ற விவகாரங்களை திமுக கையில் எடுப்பதாகவும் கூறியுள்ளார்.


