News March 29, 2025
இந்திய பணக்காரர்களிடம் ₹98 லட்சம் கோடி உள்ளது

2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.
Similar News
News October 21, 2025
காங்கிரஸ் தேசவிரோத கட்சி: தமிழிசை

காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்பதால் தான், வெளிநாட்டுக்கு சென்று இந்தியா குறித்து ராகுல் காந்தி தவறாக பேசி வருவதாக தமிழிசை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களின் பேசும் எந்த கருத்தையும் மக்கள் மதிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் தேசிய கட்சி அல்ல என கூறிய அவர், அது ஒரு தேசவிரோத கட்சி என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
News October 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 21, 2025
மச்சினனுக்கு அண்ணி கொடுத்த தண்டனை

உ.பி.,யில் 20 வயது இளைஞரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்ன தெரியுமா? அண்ணியின் தங்கையை காதலித்த இளைஞர் உமேஷ், பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், தன் தங்கை கவலையில் வாடுவதை பொறுக்க முடியாத அண்ணி மஞ்சு, தூங்கிக் கொண்டிருந்த உமேஷை சரமாரியாக குத்தியதுடன், அவரின் அந்தரங்க உறுப்பையும் துண்டித்தார். இளைஞர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.