News March 29, 2025

இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்…அதிசயமா? அலட்சியமா?

image

அரசு சுகாதார மையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் ஹாஸ்பிடலில் உயிர்பிழைத்த சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா – ஜோதி குமாரி தம்பதிக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு டாக்டர் கூறியுள்ளார். பின்னர், தனியார் ஹாஸ்பிடலில் ஆக்சிஜன் செலுத்தியபோது குழந்தை அழத் தொடங்கி இருக்கிறது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 18, 2025

காலையில் வெடிக்க போகும் அரசியல் பூகம்பம்!

image

ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ஆனால், எந்த விவகாரம் குறித்து பேச உள்ளார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது. இருப்பினும், 2 மாநிலங்களில் உள்ள 2 தொகுதிகள் மற்றும் ஒரு High Profile லோக்சபா தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

News September 18, 2025

21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

பாண்டியர் கோட்டை புகும் சோழ இளவல்?

image

சங்க கால தமிழ், எயினர் மரபு, ரணதீர பாண்டியனின் தீரம் என ‘யாத்திசை’ படத்தை வரலாற்று பிரமாண்டமாக படைத்திருப்பார் இயக்குநர் தரணி ராசேந்திரன். அவர் அடுத்து இயக்கும் படத்தில், சோழ இளவல் ‘பொன்னியின் செல்வர்’ ரவி மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை ரவி மோகனே தயாரிக்க இருக்கிறாராம்.

error: Content is protected !!