News March 28, 2025

பரிதாப நிலையில் சிஎஸ்கே… பயம் காட்டும் ஆர்சிபி!

image

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி(5), கேப்டன் ருதுராஜ்(0), ஹூடா(4), சாம் கரன்(8) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஆர்சிபி வீரர் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 9 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே, இன்னும் 11 ஓவர்களில் 144 ரன்கள் எடுக்குமா?

Similar News

News April 3, 2025

USA அதிபராக 4 முறை பதவி வகித்த 2ம் உலகப் போர் ஹீரோ

image

USA அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அதிபராக முடியும். ஆனால் அதிபர் டிரம்ப், 3ஆவது முறை அதிபராவேன் என கூறி வருகிறார். இது சாத்தியமா? இதற்கு முன், 3 முறை அதிபராக யாரும் இருந்துள்ளனரா? என்ற கேள்விக்கு ஆம் என்பதே பதிலாகும். எப்.டி. ரூஸ்வெல்ட் 1933-1945 வரை 4 முறை பதவி வகித்துள்ளார். பாெருளாதார மந்தநிலை, 2ம் உலக போரே அவர் 4 முறை அதிபராக தேர்வாக காரணமாக அமைந்தது.

News April 3, 2025

வக்ஃப் சொத்துகள் எவ்வளவு தெரியுமா?

image

இஸ்லாமியர்களால் தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை, அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இச்சொத்துகளை நிரந்தரமாக குத்தகைக்கு விடவோ, விற்கவோ முடியாது. விவசாய நிலங்கள் முதல் கல்வி நிலையங்கள் வரை, வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலம் (ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பு) உள்ளது. ரயில்வே, ராணுவத்துக்கு அடுத்து, நாட்டில் அதிக நிலம் வைத்துள்ள உரிமையாளர் வக்ஃப் வாரியம் தான்.

News April 3, 2025

தென்னிந்தியாவில் பேய் மழை கொட்ட போகுது: IMD

image

மத்திய மற்றும் தென்னிந்தியாவில் அடுத்த சில நாட்களில் கன மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. கேரளா, மாஹே, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அப்போ, குடையை எடுத்து ரெடியா வைங்க.

error: Content is protected !!