News March 28, 2025

குமரியில் 207 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 22, 208 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 22,001 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 8, 2025

குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 8, 2025

குமரியில் கிடுகிடுவென உயர்ந்த தேங்காய் விலை

image

குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி தேங்காய் மிகவும் பிரபலம் ஆகும். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான சமையல் தேங்காய் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. சந்தையில்  கடந்த மாதம் வரை கிலோ ரூ. 55 க்கு விற்பனையான தேங்காய் தற்போது ரூ. 65 விலையில் விற்கப்பட்டுகிறது. சில்லறை கடைகளில் ரூ.68 வரை விலைக்கு போகிறது.   தேங்காய் விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறினார். 

News November 8, 2025

குமரி: ஊராட்சியில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., உடனே APPLY

image

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ. 09) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!