News April 2, 2024

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

image

பதஞ்சலி விளம்பரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதனை ஏற்க மறுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக ராம்தேவை கண்டித்த நீதிமன்றம், எதன் அடிப்படையில் உங்கள் நிறுவன மருந்து மற்ற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியது.

Similar News

News August 12, 2025

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்? நேரு விளக்கம்

image

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என தெரிவித்த அவர் கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 12, 2025

என் சாவுக்கு காதலனே காரணம்.. உயிரை விட்ட பெண்

image

‘எனது சாவிற்கு காதலன் ரமீஸும், அவரது குடும்பமுமே காரணம். மதம் மாறச் சொல்லி என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்கள்.’ கேரளா எர்ணாகுளத்தில் டீச்சர் டிரைனிங் மாணவி சோனா(23) தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய வரிகள் இவை. வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்த அவருக்கு நடந்த கொடுமைகள் அவரது உயிரையே பறித்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், ரமீஸை கைது செய்து விசாரித்து வருகிறது.

News August 12, 2025

BREAKING: 4 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல்

image

ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ₹4,600 கோடி மதிப்பீட்டில் 4 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உ.பி.,யின் லக்னோவில் Phase-1B மெட்ரோ திட்டத்திற்காக ₹5,801 கோடியும், அருணாச்சலில் 700 மெகா வாட் மின் திட்டத்திற்காக ₹8,146 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!