News March 28, 2025

Rewind: பேரழிவு நாளாக மாறுகிறதா மார்ச் 28?

image

மார்ச் 28-ம் தேதியில் மட்டும் வெவ்வேறு ஆண்டுகளில் 3 மிகப்பெரிய நிலநடுக்கங்களை உலகம் கண்டுள்ளது. துருக்கியில் 1970 மார்ச் 28 அன்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்(7.1) பதிவானது. இதில், 1086 பேர் உயிரிழந்தனர். இந்தோனோசியாவின் சுமத்ரா தீவுகளில் 2005 மார்ச் 28-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் (8.7), 905 பேரின் உயிரைக் குடித்தது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மியான்மர் நாட்டை உருக்குலையச் செய்துள்ளது.

Similar News

News April 2, 2025

75 ஆண்டு கால உறவு.. வாழ்த்து கூறிய சீன அதிபர்

image

இந்தியா- சீனா இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் முர்முவுக்கு சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், இருதரப்பு உறவுகள் டிராகன்- யானை நடன வடிவத்தை எடுக்கவும், நீண்டகால கண்ணோட்டத்தில் இருந்து இருதரப்பு உறவுகளை கையாளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுவான வளர்ச்சியை உறுதிசெய்ய இருநாடுகளும் இணைந்து செயல்படவும் கேட்டுக்கொண்டார்.

News April 2, 2025

ஏப்ரல் 02: வரலாற்றில் இன்று

image

*1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது. *1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். *1984 – ராகேஷ் சர்மா, டி-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். *2011 – மும்பையில் நடந்த WC இறுதி ஆட்டத்தில், இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

News April 2, 2025

1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

image

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.

error: Content is protected !!