News March 28, 2025
தெருநாய் தொல்லை… பிரதமரிடம் முறையிட்ட எம்.பி

தெருநாய் தொல்லை குறித்து பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார். இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை 6.2 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், உலகில் நிகழும் ஒட்டுமொத்த ரேபிஸ் மரணங்களில் 36% இந்தியாவில் நிகழ்வதாகவும் பிரதமரிடம் அவர் கூறியுள்ளார். போதுமான நிதி இல்லாததால், நகராட்சிகள் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 2, 2025
1 ரன்னுக்கு ₹1.59 கோடி சம்பளம்!

ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ₹27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், நடப்பு IPLல் அவர் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதை கணக்கிட்டால், அவருக்கு 1 பந்துக்கு ₹1.04 கோடியும், 1 ரன்னுக்கு ₹1.59 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ வென்றுள்ளது.
News April 2, 2025
சீனாவை அழைத்த வங்கதேசம்.. வடகிழக்கில் கொதிநிலை

வடகிழக்கு மாநிலங்களை லாக் செய்ய, சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் என அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவர் யூனுஸ் பேசினார். இதை கண்டித்த அசாம் முதல்வர் சர்மா, வடகிழக்கு மாநிலங்களையும், பிரதான இந்தியாவையும் இணைக்க சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தை உடைக்க TMP தலைவர் மனிக்யாவும், மணிப்பூரை கண்டுக்காத அரசு, இதில் கவனம் செலுத்த காங். தலைவர் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.
News April 2, 2025
USA-வில் இன்று அமல்.. இந்தியாவுக்கு பிரச்னை?

டிரம்ப் அறிவித்தபடி, USA-வில் வெளிநாட்டு இறக்குமதி பொருள்களுக்கான வரி உயர்வு இன்று முதல் அமலாகிறது. மற்ற நாடுகளில் USA இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் அதே சதவிகித வரி, USA-விலும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இதனால் கனடா, மெக்ஸிகோ நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். USA விதித்த சில நிபந்தனைகளை ஏற்றதால், இந்திய பொருட்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.