News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.
Similar News
News December 18, 2025
கலை நாயகன் காலமானார்.. கண்ணீருடன் குவியும் இரங்கல்

இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பியான ராம் சுதர் (100) வயது மூப்பு காரணமாக காலமானார். நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை, குஜராத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலை (வல்லபாய் படேல்), பெங்களூருவில் அமைந்துள்ள செழுமைக்கான சிலை (கெம்பேகவுடா) போன்றவை இவரின் கைவண்ணத்தில் உருவானவை. 2016-ல் பத்ம பூஷன் விருது பெற்ற அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 18, 2025
பாதியிலேயே அனுப்பப்படும் கர்ப்பிணிகள், குழந்தைகள்

விஜய்யின் பரப்புரை கூட்டத்திற்கு கர்ப்பிணிகள், சிறுவர்கள், குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதையெல்லாம் மீறி ஈரோடு பரப்புரை திடலுக்கு வந்த கர்ப்பிணிகள், குழந்தைகளை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார், தவெக நிர்வாகிகள் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். கரூரில் விஜய்யை பார்க்க சென்று உயிரிழந்தவர்களில் 9 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 18, 2025
CSK-வில் கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர்?

IPL மினி ஏலத்தில் கேமரூன் கிரீனை CSK வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிக தொகை, Auction Dynamics காரணமாக அவரை வாங்கமுடியாமல் போனது. எனினும் அவருக்காக உருவாக்கிய ஸ்பெஷல் போஸ்டரை CSK பகிர்ந்துள்ளது. அதில் பதிரானா, வெங்கடேஷ் ஐயர், லிவிங்ஸ்டன், ரச்சின் ரவீந்திராவும் உள்ளனர். இதற்கு ❤️ விடும் ரசிகர்கள், ஒருவரையாவது கூடுதல் தொகை கொடுத்து வாங்கியிருக்கலாமே என வருந்துகின்றனர்.


