News March 28, 2025
வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

வரும் ஏப்ரலில் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, பின்வரும் நாள்களில் வங்கிகள் செயல்படாது: ஏப்.6 (ஞாயிறு, ராமநவமி), ஏப்.10 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.12, 2-ம் சனி, ஏப்.14 (தமிழ் புத்தாண்டு, விஷு), ஏப்.18 (புனித வெள்ளி), ஏப்.26 4-ம் சனி, ஏப்.13, 20, 27 – ஞாயிறு. இந்த தேதிகள் அடிப்படையில் உங்கள் வங்கிப் பணிகள், பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Similar News
News November 3, 2025
காலில் விழுவதுதான் சுயமரியாதையா? சீமான்

சுயமரியாதை என்ற சொல்லை உச்சரிக்க திமுக, அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். உதயநிதி காலில் அவர் வயதை ஒத்தவர் விழுவதும், சசிகலா காலில் விழுந்து CM பதவி பெற்றதுதான் சுயமரியாதையா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். திராவிடம் என்றால் ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு என கூறினார்கள். ஆனால், திராவிட கட்சியான அதிமுகவிற்கு ஆரியரான ஜெ., தலைவரானது எப்படி எனவும் சாடினார்.
News November 3, 2025
இனி நாம் நுகர்வோர் அல்ல, முன்னோடி: PM

<<18184055>>ESTIC 2025<<>> மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் அல்ல, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் உலகளாவிய முன்னோடி என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ந்துள்ளதாக கூறிய அவர், காப்புரிமை பதிவுகள் 17 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், ஸ்டார்ட்அப் சூழலில் உலகில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News November 3, 2025
நவ.6-ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நவ.6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், MP, MLA-க்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத தவெக போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என தெரிகிறது.


