News April 2, 2024

மதுரையில் கோஷ்டி மோதல், ரவுடி குத்திக் கொலை

image

திருமங்கலம் அருகே செங்குளத்தில் வசிக்கும் ரௌடி முத்தையா, சோழவந்தான் அருகே மேலக்காலில் நிகழ்ச்சிக்கு சென்றபோது, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்தையா தனது நண்பர்களுடன், சித்தார்த்தை சந்திக்க சென்ற போது, மீண்டும் மோதல் ஏற்பட்டு முத்தையா குத்தி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

மதுரை: NO EXAM – போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மதுரை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 2, 2026

மதுரை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

மதுரை: டூவீலர்கள் மோதியதில் இளைஞர் பலி

image

உசிலம்பட்டி அருகே கல்லூத்தை சேர்ந்தவர் சிவபாண்டி(24). இவர் கரடிகல்லில் இருந்து கூத்தியார்குண்டு சாலையில் நேற்று டூவீலரில் சென்ற போது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த சேடப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்(40) மோதினார். இதில் தலையில் அடிபட்டு சிவப்பாண்டி பலியானார். படுகாயத்துடன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!