News March 28, 2025
அணிவகுத்து நிற்கும் கனரக லாரிகள்

தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள குவாரிகளிலிருந்து நாள்தோறும் கனரக லாரிகள் மூலம் அரசின் விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. லாரியில் செல்லும் வழியில் கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் ரயிலுக்காக மூடப்படும் போது லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அணிவகுத்து வரிசையாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
தென்காசி: பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

தென்காசி மக்களே வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 14, 2026
தென்காசி: மரநாயை வேட்டையாடிய நபர் கைது

புளியரை பிரிவு, மிளகரைச்சான்பாறை பீட் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டபோது கீழப்புதுார் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ச.ஆறுமுகம், என்பவரின் வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில் மரநாய் ஒன்றினை வேட்டையாடிது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்து ச.ஆறுமுகம் என்பவர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.
News January 14, 2026
தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரவுண்ட் பணி

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன்உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (ஜன 13) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


