News April 2, 2024
காஷ்மீரின் ஒரு பகுதியை பாக். ஆக்கிரமிக்க நேருவே காரணம்

காஷ்மீரின் ஒரு பகுதியை பாக். ஆக்கிரமித்து வைத்திருக்க நேருவே காரணமென அமித் ஷா விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்து கொண்டிருந்தபோது தன்னிச்சையாக நேரு சண்டை நிறுத்தம் செய்தார். 2 நாள்களுக்கு பிறகு இதை செய்திருந்தால், காஷ்மீர் முழுவதும் இந்தியாவிடம் இருந்திருக்கும். அவர் செய்த தவறால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது” என்றார்.
Similar News
News August 16, 2025
யார் இந்த ஐ.பெரியசாமி?

‘MGR-ஐ வத்தலகுண்டுக்குள் வரவிட மாட்டேன்’ என 1973-ல் கூறி கவனம்பெற்று, திமுக ஒன்றிய தலைவரானவர் ஐ.பெரியசாமி. ஆத்தூர் MLA-வாக 1989-ல் முதல்முறையாக சட்டப்பேரவையில் நுழைந்தவர், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றார். 1996-ல் முதல்முறையாக அமைச்சராகப் பதவியேற்ற அவர், 2009 வரை மு.க.அழகிரியுடன் நெருக்கம் காட்டினார். அதன்பிறகு, தற்போது வரை ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார்.
News August 16, 2025
இன்று வாஜ்பாயின் நினைவு தினம்!

Ex PM அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. மக்கள் நலனே தனது அரசியலின் நோக்கமாகக் கொண்டு பணியாற்றியவர், பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா மூலம் கிராமங்களுக்கு சாலை, சர்வஜனிக் கல்வி திட்டம் மூலம் கல்வி, – அந்த்யோதயா அன்ன யோஜனா மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் என மக்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியவர்.
News August 16, 2025
எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: கார்கே

ஆட்சியில் தொடர எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடுமென கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். பிஹாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் யார் பலனடைகின்றனர் என்பது தெளிவாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும், மோசடிகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதற்கானது எனக் கூறினார்.