News March 28, 2025
விரல் ரேகை பதிந்தால் மட்டுமே GAS சிலிண்டர்?

சமையல் GAS சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் GAS ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
உங்களுக்கு டாக்சிக் நண்பர் இருக்கிறாரா?

உங்களிடம் எப்போதும் நெகடிவ் விஷயங்களையே பேசி, அவநம்பிக்கை மட்டுமே விதைத்து வருபவர் தான் டாக்சிக் நண்பர். அவர், *எப்போதும் உங்களை மட்டம் தட்டுவார். *உங்களுடைய மைனஸை மட்டுமே சுட்டிக்காட்டி, பெரிது படுத்துவார். *எதையும் நெகடிவாக அணுகுவார். *தன்னைப் பற்றியே அதிகம் பேசுவார். *எப்போதும் புறணி, கிசுகிசு பேசுவார். *உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு, மாற்ற முயல்வார். இப்படியான நண்பர் உங்களுக்கு இருக்கிறாரா?
News August 9, 2025
டாக்சிக் நண்பரை சமாளிப்பது எப்படி?

டாக்சிக் நண்பரை அடையாளம் கண்டபின் *அவர்களுக்கான லிமிட்டை முடிவு செய்யுங்கள் *உங்களை பாதிக்கும் நட்பை முறித்துக்கொள்ள உங்களுக்கு எப்போதும் உரிமை உள்ளது. ஆகவே, எல்லை மீறினால் விலகத் தயங்காதீர் *எதையும் நேருக்கு நேர் சொல்லி விடுங்கள் *உங்களுக்கென தனியே நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் *மீண்டும் அவருடன் தொடர்பை புதுப்பிக்க விரும்பினால், ஒன்றுக்கு இருமுறை யோசியுங்கள் *புதிய நண்பர்களை கண்டறிந்து பழகுங்கள்.
News August 9, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.