News March 28, 2025
ஓரினச் சேர்க்கை மோகம் – வாலிபருக்கு கத்திக்குத்து

மேட்டூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக புருஷோத்தமன் முதியவரைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், புருஷோத்தமனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை.
Similar News
News April 2, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

ஏப்.02,08,10,20,22 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190), ஏப்.12,13,14,15,17,18,19,20,21 ஆகிய தேதிகளில் ஆழபுலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; மாறாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
News April 2, 2025
2-வது இடம்பிடித்த சேலம்!

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. 2024 2025 ஆம் நிதி ஆண்டில் கடந்த 31ஆம் தேதி வரை, சேலம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் ரூ.165 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 சதவீதம் சொத்து வரி வசூல் ஆகியுள்ளது. இதனால் வரி வசூலில் சேலம் மாநகராட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். SHARE IT!
News April 1, 2025
விரைவில் திருமணம் ஆக செல்ல வேண்டிய கோயில்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் காயநிர்மலேஸ்வரர் கோயில் ஒரு அக்னி தலமாகும். இக்கோயிலில் உள்ள காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்குமாம். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் கோட்டை எனும் பகுதியில் இக்கோயில் உள்ளது.