News March 28, 2025
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்: அமைச்சர் உறுதி

சட்டப்பேரவையில் நேற்று ADMK உறுப்பினர் ஜெயக்குமார், படிக்கட்டுகளில் பயணித்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னையில் உள்ள பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி முடிந்துள்ளதாகவும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் பஸ்களில் படிப்படியாக தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News August 23, 2025
WhatsApp-ல் இந்த மெசேஜை கிளிக் செய்யாதீங்க… WARNING!

மோசடியாளர்கள் நாளும் புதுப் புது உத்திகளை கண்டுபிடித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில், அரசு ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப்பில் திருமண பத்திரிகையுடன் APK ஃபைல் ஒன்றும் வந்துள்ளது. அதை அவர் கிளிக் செய்த அடுத்த நொடி, அவரின் மொபைல் ஹேக் செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் இருந்து ₹1.90 லட்சம் திருடப்பட்டது. போலீஸ் இதை விசாரித்து வருகின்றனர். ஆகவே மக்களே, இந்த மாதிரி மெசேஜ்களை கிளிக் செய்யாதீங்க.
News August 23, 2025
ரஜினி வரலாற்றில் முதல்முறை… குவியும் ‘கூலி’ வசூல்

ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ‘கூலி’ படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேகமாக இந்த சாதனையை படைத்த ரஜினி படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எந்திரன் பட இந்தி பதிப்பு வசூலை (₹23.84 கோடி) இந்த படம் எட்டே நாள்களில்(₹26.02 கோடி) முறியடித்துள்ளதாம். ரஜினி கரியரில் அதிகம் வசூலித்த ‘2.0’, ‘ஜெய்லர்’ ஆகிய படங்களின் வசூலை ‘கூலி’ முந்துமா?
News August 23, 2025
SPACE: பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?

பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஈர்ப்பு விசையின்றி மனிதர்கள் தூக்கி வீசப்படுவார்கள்
பூமியின் ஒரு முனையில் எப்போதும் வெயில், மற்றொரு முனையில் குளிர் நிலவும். இதனால் உயிரினங்கள் இறக்கும்
சூரியன் இன்றி தாவரங்கள் வளராது. உணவு தட்டுப்பாடு ஏற்படும்
சுனாமி, பூகம்பங்கள் உருவாகும்
மொத்தத்தில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக பூமி மாறும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.