News March 28, 2025

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

ஜம்மு – காஷ்மீரில் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த 5 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News October 16, 2025

சத்தீஸ்கரில் ஒரேநாளில் 171 நக்சல்கள் சரண்

image

சத்தீஸ்கரில் இன்று ஒரே நாளில் 171 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அரசமைப்பை நம்பி வன்முறையை கைவிட்டு வந்தவர்களை பாராட்டுவதாகவும், மோடி அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சலிசம் அழிவின் இறுதியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மீதமுள்ள நக்சல்களும் சரணடைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இல்லையென்றால் ஆயுதப்படைகள் அவர்களை வீழ்த்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

பழைய பென்ஷன் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

image

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க ₹1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 16, 2025

உதவி பேராசிரியர் தேர்வு.. நாளை முதல் Apply பண்ணுங்க

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பாடவாரியான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நவ.10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

error: Content is protected !!