News March 28, 2025

லேப்டாப்கள் திருட்டு: போலீசாருக்கு ஷாக்

image

செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசுப்பள்ளி கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய இலவச லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலை உடைத்து லேப்டாப்கள் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் அதே பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவர்களே அந்த லேப்டாப்களை திருடியது தெரியவந்தது.

Similar News

News November 9, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு பறந்த உத்தரவு

image

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலை 3 ஆண்டுகள் தாமதமாக வழங்கியதால், மனுதாரரான பல்லாவரத்தைச் சேர்ந்த டி. தங்கபாய் என்பவருக்கு ₹10,000 இழப்பீடு வழங்குமாறு செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை இன்று முதல் ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

செங்கல்பட்டு: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

செங்கல்பட்டு: இந்த மெசேஜ் உங்களுக்கு வந்ததா?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் மதுராந்தகம் ஆகிய தாலுகாவில் உள்ள கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வரின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ்களும் வந்துள்ளனர், நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!