News April 2, 2024

சென்னைக்கு வருகை தந்துள்ள துணை ராணுவ வீரர்கள்

image

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மேலும் 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் இன்று முதல் வருகை தர உள்ளனர். இவர்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சென்னையிலும் பதட்டமான வாக்கு சாவடியில் கண்காணிக்க உள்ளனர் இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 90 வீரர்கள் இடம் பெற்றிருப்பார்கள்.

Similar News

News November 19, 2025

சென்னை மக்களே மிஸ் பண்ணவேண்டாம்!

image

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் நவ.21 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 9499966026 எண்ணை அழைக்கலாம். மிஸ் பண்ணாதீங்க. SHARE IT

News November 19, 2025

சென்னையில் ED ரெய்டு; காலையில் அதிரடி!

image

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள நிறுவனங்கள் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகள் மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!