News March 28, 2025
செவ்வாய் தோஷம் நீங்க…

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறது என கவலையில் மனம் வாடுவோர் செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி திதி நாளில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சாற்றி, 32 தீபங்களை ஏற்றி, முக்குறுணி மோதகம் படைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இந்த வழிபாடு செய்த கையோடு 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும் என ஐதீகம்.
Similar News
News April 2, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டில் ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.
News April 2, 2025
ராசி பலன்கள் (02.04.2025)

➤மேஷம் – அலைச்சல் ➤ரிஷபம் – நிம்மதி ➤மிதுனம் – பாராட்டு ➤கடகம் – அமைதி ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – லாபம் ➤துலாம் – செலவு ➤விருச்சிகம் – வெற்றி ➤தனுசு – அமைதி ➤மகரம் – பரிவு ➤கும்பம் – பணிவு ➤மீனம் – ஓய்வு.
News April 2, 2025
தியேட்டரில் IPL போட்டிகள்?

நடப்பு ஐபிஎல் தொடரை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி கேட்டிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். தற்போதைய நிலவரப்படி, திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்ப அனுமதி உண்டு. கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றை ஒளிபரப்பினால் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். உங்களுக்கு தியேட்டரில் IPL பார்க்க விருப்பமா?