News March 27, 2025
தூத்துக்குடி: இளநீரை கண்டு வியந்த ஆங்கிலேய கலெக்டர்

தூத்துக்குடியில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஸ்ரீ வைகுண்டம் பகுதிக்கு வந்தபோது, இளநீரை குடிக்க கேட்டுள்ளார். சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு வைத்துள்ளதால் விவசாயி தர மறுத்த போது, இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? என கேட்டுள்ளார். இளநீரை பறித்த போது அதில் 3 கொம்புகள் இருந்துள்ளது. இன்றும் அந்த இளநீர் தென்திருப்பேரை அழகிய பொன்னம்மை தாயார் உடனுறை கைலாசநாதர் கோயிலில் உள்ளது.*ஷேர்
Similar News
News April 7, 2025
தூத்துக்குடி பார் கவுன்சிலில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தூத்துக்குடி நீதிமன்ற பார் கவுன்சிலில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு பதவிக்காலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்.3 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இன்று மாலை மனுக்கள் பரிசீலனையும், 9ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2025
தூத்துக்குடியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
News April 7, 2025
தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.