News March 27, 2025
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். x தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், அன்புத் தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் எனவும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 3, 2025
பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை… எப்படி தெரியுமா?

பள்ளிகளுக்கு வார இறுதி நாள்கள் மூலம் மாதந்தோறும் 8 நாள்கள் விடுமுறை கிடைக்கும். நவம்பரில் கூடுதலாக ஒரு சனி, ஞாயிறு உள்ளதால் 10 நாள்கள் விடுமுறையாகும். சனி, ஞாயிறு (நவ.1, 2) லீவு முடிந்து மாணவர்கள் இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர். மேலும், நவ. 8, 9, 15, 16, 22, 23, 29, 30-களிலும் லீவுதான். நவ.14 அன்று குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும், ஆனால் விடுமுறை கிடையாது.
News November 3, 2025
ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 40 புள்ளிகள் உயர்ந்து 83,978 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 புள்ளிகள் உயர்ந்து 25,763 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மகிந்திரா, டாடா, SBI பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், மாருதி சுசூகி, TCS நஷ்டத்தை சந்தித்துள்ளன.
News November 3, 2025
தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது SC

தெரு நாய்கள் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி <<18184221>>தமிழகம்<<>> உட்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகினர். மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அதை ஆய்வு செய்ய உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், வரும் 7-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


