News March 27, 2025

வங்கியில் தங்கம் டெபாசிட் (GMS) திட்டம் நிறுத்தம்!

image

தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீடு திட்டத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களைப் பெறலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 1, 2025

3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

News April 1, 2025

மாணவனின் தந்தைக்கு காம வலைவீசி, மிரட்டிய டீச்சர்!

image

பெங்களூருவில் காம வலை வீசி பணம் பறித்த டீச்சர் கைதாகியுள்ளார். மகனின் பள்ளி சேர்க்கைக்காக சென்றவருடன், டீச்சர் ஸ்ரீதேவி ருடகி நெருங்கி பழகியுள்ளார். இருவரும் தகாத உறவில் இருந்த நிலையில், ஸ்ரீதேவி அதனை வீடியோ எடுத்து பணம் பறித்துள்ளார். ரூ.4 லட்சத்தை மிரட்டி பறித்த நிலையில், மேலும் ரூ.20 லட்சம் கேட்டதால் அவர் போலீசை நாடினார். இதன்பின், டீச்சர், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைதாகியுள்ளனர்.

News April 1, 2025

PF ஆட்டோ செட்டில்மென்ட் ரூ.5 லட்சமாக உயருகிறது

image

மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதலுக்காக PF பணத்தை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த இபிஎப் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதையடுத்து மத்திய குழுவின் அனுமதி கிடைத்ததும் இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!