News March 27, 2025
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆன்லைன் கேம் விளையாடுவதால் இணையத்தில் மக்களின் பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ஆன்லைன் கேம் விளையாடும் நபர்களின் பணத்தை இழக்க நேரிடும். எனவே ஆன்லைன் கேம் விளையாடுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News December 28, 2025
திருப்பத்தூரில் சிறுவனை கடித்து குதறிய நாய்!

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணீஷ் என்ற சிறுவன் நேற்று (டிச.27) வக்கணம்பட்டி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த நாய் சிறுவனை கடித்தது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 28, 2025
ஆம்பூர்: வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது!

ஆம்பூர் அடுத்த பி கஸ்பா பகுதியை சேர்ந்த தீபக் (28) மற்றும் விக்கி (28). இருவருக்கிடையே சில நாட்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டது. இது கை கலப்பாக மாறவே, விக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபக்கை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த தீபக் ஆம்பூர் அரசு மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படியில் நேற்று போலீசார் விக்கியை கைது செய்தனர்.
News December 27, 2025
திருப்பத்தூர்: டிகிரி முடித்தவரா நீங்கள்? SBI-ல் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


