News April 2, 2024

தி.மலை அருகே மீட்கப்பட்ட ஆண் சடலம்

image

ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புளியமரம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

தி.மலை: தீபத்தன்று மலையேற அனுமதி உண்டா?

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது என்று ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கார்த்தை தீபத் திருநாளன்று மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த பின்னரே மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கார்த்தை தீபத் திருநாளை ஓட்டி முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

News November 19, 2025

தி.மலை: தலை நசுங்கி இளைஞர் பலி!

image

ஆரணி வட்டம், அரியப்பாடி, ஆரணி- சிறுமூர் சாலை பகுதியில், தனியார் பேருந்து ஒன்று சிறுமூர் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்ராபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (16) என்பவர் ஒட்டி வந்த பைக், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News November 19, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!