News March 27, 2025

10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை!

image

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என கூறியுள்ள அவர், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 1, 2025

FACTCHECK: நித்தியானந்தா மரணம்?

image

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக இரண்டு நாள்களாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேரலையில் பேசிய அவரது சகோதரி மகன், சுவாமிஜி இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால், வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் இப்படி நாடகமாடலாம் என்ற பேச்சும் எழுகிறது. எனவே, அவரது மரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

News April 1, 2025

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை இத்தனை கோடியா?

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ பட ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்தாண்டு ஜன. 9-ல் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

News April 1, 2025

22 வயது பெண் ஆணவக் கொலையா?

image

பல்லடம் அருகே 22 வயது பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெண்மணி – வித்யா 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த வித்யாவின் உடலை, போலீசுக்கு தெரிவிக்காமல் பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து, காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக காதலன் அளித்த புகாரில், அப்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

error: Content is protected !!