News March 27, 2025
காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News October 21, 2025
தேனி: விடுதியில் ஒருவர் மர்ம மரணம்

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (50). குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்கி இருந்த இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும் இவர் குடிக்கு அடிமையாகி உள்ளார். நேற்று முன் தினம் இரவு விடுதியில் சாப்பிட்டு விட்டு தூங்கிய அவர் நேற்று (அக்.20) காலை மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை.
News October 21, 2025
தேனி: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், தேனி மாவட்ட மக்கள், 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News October 21, 2025
தேனியில் 12 ஆண்டுக்கு பிறகு கைது

தேனி கோடாங்கிபட்டியை சேர்ந்த அழகுராஜா. இவரது மனைவி செல்வலட்சுமி ஆகியோர் 2013.ல் ஏற்பட்ட விபத்தில் பலியாகினர். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சதீஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சதீஷ் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி போலீசார் சதீஷை நேற்று (அக்.20) கைது செய்தனர்.