News March 27, 2025
காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 1, 2025
தேனியில் மழைக்கு வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது . வளிமண்டல கீழ் அடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தேனி உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று(ஏப்ரல்.1) இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல ஏப்ரல் மூன்றாம் தேதி தேனியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 1, 2025
தேனி : பெண்களுக்கு அறிய வாய்ப்பு

தேனி மாவட்டம் PCபட்டியில் தனியார் நிறுவனம் சார்பில் மகளிருக்கான இலவச தையல் , ஆரிஎம்ராய்ட்ரி, அழகுக்கலை உள்ளிட்ட திறன் பயிற்சிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் நடைபெற்ற உள்ளது. இந்த பயிற்சியில் 18-35 வயது நிரம்பிய 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் கலந்து கொள்ளலாம். இது பற்றி கூடுதல் தகவல் தெரிந்து கொள்ள 8838252367 , 9994670967 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 1, 2025
தேனியில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.3,4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.