News March 27, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர். அதோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றன.
Similar News
News September 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது வழக்கு இன்று ஆறாவது முறையாக ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிட்டு உத்தரவிட்டார்.
News September 18, 2025
BREAKING: பரமக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

ராமநாதபுரம் அருகே ஏந்தல் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்(32). பார்த்திபனூர் காமாட்சி நகரில் வசித்த இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இன்று (செப்.18) மாலை 5 மணியளவில் மிதமான மழை பெய்தது. அப்போது வேலை விஷயமாக மேலப்பெருங்கரை சென்ற ரமேஷ், நாடக மேடை அருகே புளியமரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கி இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 18, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப். 18) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது. இராமேஸ்வரம், தனுஷ்கோடி, சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், மாலை நேரத்தில் இராமநாதபுரம் முதுகுளத்தூர், பரமக்குடி, பார்த்திபனூர், சாயல்குடி கமுதி, அபிராமம், மஞ்சூர், மீசல், கடலாடி, திருவாடானை, பாண்டியூர், தூவல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.