News March 27, 2025
டெபாசிட் வட்டியை குறைக்கும் வங்கிகள்

ஏப்ரல் மாதம் முதல் டெபாசிட் பணத்துக்கான வட்டியை குறைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டியை குறைத்தது. இதனையடுத்து, லோன்களுக்கான வட்டியை குறைத்த வங்கிகள் டெபாசிட் வட்டியில் மாற்றமில்லாமல் வைத்திருந்தன. இதனால், வங்கிகளின் லாபம் குறைவதால், அடுத்த மாதம் முதல் டெபாசிட் வட்டியை குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இதனால், மக்களின் FDக்கான வட்டி குறையும்.
Similar News
News April 1, 2025
FACTCHECK: நித்தியானந்தா மரணம்?

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக இரண்டு நாள்களாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேரலையில் பேசிய அவரது சகோதரி மகன், சுவாமிஜி இந்து தர்மத்தை காக்க உயிர் தியாகம் செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால், வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் இப்படி நாடகமாடலாம் என்ற பேச்சும் எழுகிறது. எனவே, அவரது மரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
News April 1, 2025
‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமை இத்தனை கோடியா?

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ பட ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்தாண்டு ஜன. 9-ல் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
News April 1, 2025
22 வயது பெண் ஆணவக் கொலையா?

பல்லடம் அருகே 22 வயது பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வெண்மணி – வித்யா 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த வித்யாவின் உடலை, போலீசுக்கு தெரிவிக்காமல் பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து, காதலியின் சாவில் மர்மம் இருப்பதாக காதலன் அளித்த புகாரில், அப்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.