News March 27, 2025
2 நாள்களுக்கு ஜாக்கிரதையாக இருங்கள்..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வெப்ப பாதிப்பைத் தவிர்க்க பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறி வெளியில் செல்வோர் குடிநீர், குடை ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.. SHARE IT
Similar News
News April 1, 2025
எம்புரான் படத்துக்கு தடைகோரி கேரளா ஐகோர்ட்டில் வழக்கு

மோகன்லாலின் எம்புரான் படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்புரான் படத்தை வெளியிட தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி வழக்குத் தொடர்ந்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News April 1, 2025
பெண்ணை 3 மணிநேரம் கதற கதற… மிருகமான மனிதர்கள்

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தொடர்ந்து 3 மணிநேரம் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல். அப்போது அப்பெண், தாகம் எடுக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால், இந்த காமுகர்கள், தண்ணீர் கொடுக்காமல், அப்பெண்ணின் வாயில் சிறுநீர் பெய்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
News April 1, 2025
ரூ.92 லட்சத்துடன் இலவச வீடு… ஆனா ஒரு கன்டிஷன்!

இலவசமாக வீடு, ரூ.92 லட்சத்தை யாரேனும் சும்மா தருவதாக சொன்னால் வாங்கிக் கொள்ள கசக்குமா என்ன? இந்த ஆஃபரைத் தருவது இத்தாலி அரசு. ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள 33 கிராமங்களில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கே இந்த சலுகை. எந்த நாட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசிக்க வேண்டுமாம். கிராமங்களை விட்டு நகரத்திற்கு குடிபெயர்வதை தடுக்கவே இந்த முயற்சியாம். சூப்பர்ல!